search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலை பள்ளம்"

    • எடையூர் இ.சி.ஆர். சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் பொது மக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • மழையால் பாலத்தின் சாலையில் மணல் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது, முத்துப்பேட்டை அருகே எடையூர் இ.சி.ஆர். சாலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி எதிரே சாலை ஏற்பட்ட பள்ளத்தால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

    இந்த சாலை திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை பிரதான சாலையாகும்.

    இந்த சாலையில் கனரக வாகனங்களும் அரசு பேருந்துகளும் தனியார் வாகனங்களும் அதிக அளவில் செல்லும்.

    இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலத்தின் நடுவே போடப்பட்ட சிமெண்ட் குழாய் உடைந்து பள்ளம் உருவானது.

    பின்னர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒரு குழாயை கொண்டு வந்து பாலத்தில் வைத்து மேற் பரப்பில் மணலை நிரப்பி சென்று விட்டனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் பாலத்தின் சாலையில் மணல் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விபத்து நடப்பதற்கு முன்னர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் புதிய பாலத்தையும் கட்டி தரவேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது பற்றி அப்பகுதிளை சேர்ந்த நடையழகன் கூறியதாவது:-

    இந்த பாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது பாசன வாய்க்காலின் நடுவே ஏற்பட்ட10 அடி ஆழத்திற்கும் 2 அடி அகலத்திற்கும் ஏற்பட்ட பள்ளத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து வந்து போக்குவரத்தை மாற்றி அமைத்து பாலத்தின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்டி தரவேண்டும் அதுவரையில் மாற்று வழியில் போக்குவரத்து இயக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    • பொதுமக்களிடையே நெகிழ்ச்சி ஏற்படுத்தியது
    • குண்டும் குழியுமா இருந்ததால் கடும் அவதி

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் அரசு மேநிலைப்பள்ளி எதிரே உள்ள சாலை சேதமடைந்து கிடக்கிறது.

    ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமான சாலையால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

    மேலும் இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் விழுந்து காயங்களுடன் செல்வது தொடர்கதையாக உள்ளது.

    இந்த நிலையில் கடந்த மாதம் வேலூர் தொரப்பா டியை சேர்ந்த பெண் தனது மகனுடன் மொபட்டில் படவேடு ரேணுகாம்பாள் கோவி லுக்கு சென்று வீடு திரும்பிய போது அந்த பள்ளத்தில் விழுந்து பலத்த காயமடைந்தார்.

    ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    எனவே மீண்டும் அந்த இடத்தில் விபத்து ஏற்படாமல் இருக்க சந்தவாசல் போலீசார் நடவடிக்கை எடுத்து ள்ளனர். அதன்படி சந்தவாசல் போலீசார் சப்- இன்ஸ்பெ க்டர்கள் நாராயணன், மகேந்திரன் மற்றும் போலீசார் விபத்து நடந்த பள்ளத்தை சிமெண்டு கலவை கொண்டு சீரமை தந்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக நீர் ஒடிய காரணத்தால் தார் ரோடு சேதம் அடைந்து பெரிய பள்ளமாகியுள்ளது.
    • அவ்வப்போது விபத்துகள் நடைபெறுகின்றன.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் இருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையின் ஒரத்தில் இருந்த குடிநீர் குழாய் உடைந்து பல மாதங்களாக நீர் ஒடிய காரணத்தால் தார் ரோடு சேதம் அடைந்து பெரிய பள்ளமாகியுள்ளது. இந்த வழியாக அனைத்து பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும் வந்து செல்கின்றன. மேலும் அந்த பகுதியில் உள்ள கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் சென்று வருகின்றனர். இதனை தவிரவும் ஈரோட்டில் இருந்து வெள்ளகோவில் வரும் சரக்கு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் சென்று வருவது என்று எப்போதும் பரபரப்பாக இந்த ரோடு காணப்படும்.

    பஸ் நிலையம் செல்லும் ரோட்டில் விநாயகர் கோவில் அருகே சதுர வடிவில் ஒரு அடி பள்ளம் உள்ளது. ரோட்டின் காணப்படுவாதல் இருசக்கர மற்றும் கார்களில் வருபவர்களுக்கு தூரத்தில் தெரிவதில்லை. மிக அருகில் வரும்பொழுது தான் தெரிகிறது. இதனால் அவ்வப்போது விபத்துகள் நடைபெறுகின்றன. அதிகளவில் இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் வரும் போது இதில் சீக்கி கீழே விழுந்து பலத்த காயமடைந்து வருகின்றனர். இது தொடர்கதையாக நடந்து வருகிறது. ஆகவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இது குறித்து ஆய்வு மேற்கொண்டு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • ஆற்காடு ரோட்டில் பாதாள சாக்கடை பணியால் விபரீதம்
    • பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    வேலூர் சத்துவாச்சாரி கானாறு தெருவை சேர்ந்தவர் ராம் (வயது 32). எலக்ட்ரீசியன். இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். ராம் நேற்று இரவு கடைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு மோட்டார்சைக்கிள் சென்றார்.

    பின்னர் அவர் வேலூரில் இருந்து மோட்டார்சைக்கிளில் வீடு திரும்பினார். அவரது பின்னால் விளாப்பாக்கம் செல்லும் அரசு பஸ்சும் சென்றது.

    காகிதப்பட்டறை பஸ் நிறுத்தம் அருகே ராம் வந்து கொண்டிருந்தபோது திடீரென சாலையில் இருந்த மாடு ஒன்று குறுக்கே வந்ததால் சாலை பள்ளத்தில் மோட்டார்சைக்கிள் இறங்கியது.இதனால் அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    அப்போது பின்னால் வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக அவர் மீது மோதியது. இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    விபத்து நடந்ததும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு திரண்டனர். மேலும் பஸ்சும் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவியது. தகவல் அறிந்ததும் வேலூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். மேலும் ராமின் மனைவி மற்றும் குடும்பத்தினரும் அங்கு வந்து கதறி அழுதனர். இது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

    விபத்து நடந்ததும் பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டதால் பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் கீழே இறங்கினர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பஸ் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தது. எனவே பஸ்சில் இருந்த சில பயணிகள் ஆத்திரம் அடைந்தனர். அதில் ஒரு சிலர் பஸ்சின் பின்புறம் காலால் உதைத்தனர். இதை பார்த்த போலீசார் அதில் ஒருவரை பிடித்து போலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    பின்னர் ராமின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து பஸ்சையும் போலீஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். பயணிகள் வேறு பஸ்களில் ஏறிச்சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வேலூர் -ஆற்காடு சாலையில் கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் காரணமாக சாலையின் ஒரு பகுதியை மட்டுமே இருவழிப் போக்குவரத்துக்காக பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    பள்ளம் தோண்டப்பட்ட பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாததால் இந்த நிலை உள்ளது. மேலும் அங்கு டாஸ்மாக் கடைகள் உள்ளதால் பலர் மது குடித்துவிட்டு சாலையில் அதிேவகமாகவும் செல்கின்றனர். ஆங்காங்கே மாடுகளும் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரிகின்றன.

    பாதாள சாக்கடை பணிகள் முடிக்கப்பட்ட இடங்களில் சாலை அமைக்கப்பட்டு இருந்தால் இந்த விபத்து நேர்ந்திருக்காது என்று பொதுமக்கள் தெரிவித்தனர். எனவே ஆற்காடு சாலையில் சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 2018 மற்றும் 2020 க்கு இடையே 5,626 பேர் சாலைகளில் உள்ள பள்ளங்களால் ஏற்பட்ட விபத்துகளில் இறந்துள்ளனர்.
    • உருளு சேவை என்பது சமுதாய நலனுக்காக பலர் கோயில்களில் தரையில் உருளும் சடங்கு ஆகும்.

    கர்நாடகா மாநில தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்ததை அடுத்து, சாலை எங்கும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் கடுமையாக அவதிப்பட்டு வருகின்றனர்.

    மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் கடந்த மாதம் வெளியிட்ட தரவுகளின்படி, 2018 மற்றும் 2020 க்கு இடையே 5,626 பேர் சாலைகளில் உள்ள பள்ளங்களால் ஏற்பட்ட விபத்துகளில் இறந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

    2018, 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் சாலை விபத்துகளால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை முறையே 2,015, 2,140 மற்றும் 1,471 என்று அமைச்சகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில், பள்ளங்கள் நிறைந்த சாலைகளை விரைவில் சரிசெய்ய வலியுறுத்தி நபர் ஒருவர் வித்தியாசமான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டார்.

    இதுதொடர்பான வீடியோ டுவிட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

    அந்த வீடியோவில், சமூக ஆர்வலர் ஒருவர் காக்கி உடை அணிந்தபடி, பள்ளங்கள் நிறைந்த சாலையில் அங்கப்பிரதஷனம் செய்யும் காட்சி பதிவாகியுள்ளது. தென் கர்நாடகாவில் பிரபலமான உருளு சேவை எனப்படும் சடங்கு முறையை நபர் போராட்டமாக செய்துள்ளார். உருளு சேவை என்பது சமுதாய நலனுக்காக பலர் கோயில்களில் தரையில் உருளும் சடங்கு ஆகும்.

    இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதை அடுத்து சம்பந்தப்பட்ட நபரின் பெயர் நித்யானந்தா

    ஒலக்காடு என்றும் அவர் ஒரு சமூக ஆர்வலர் என்றும் தெரியவந்துள்ளது.

    கனமழை காரணமாக சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் மட்டும் கடந்த ஆண்டில் 3600 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது.#Potholes

    பருவமழை தொடங்குவதற்கு முன்னதாக அரசு எடுக்க வேண்டிய மிக முக்கிய முன்னெச்சரிக்கை பணி சாலையில் உள்ள பள்ளங்களை சரிசெய்வதாகும். ஏனென்றால், மழை பெய்த பின்னர் தண்ணீர் வெளியேற வழியின்றி சாலைகளில் தேங்கியிருக்கும் போது பள்ளம், மேடுகள் தெரியாமல் வாகன ஓட்டிகள் விபத்துகளை சந்திக்கின்றனர்.

    இப்படி நாடுமுழுவதும் கடந்தாண்டு சாலை பள்ளங்களால் ஏற்பட்ட விபத்தில் மட்டும் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3600 ஆகும். உத்தரப்பிரதேசம் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அம்மாநிலத்தில் 987 பேர் உயிரிழந்துள்ளனர். 

    அதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 726 பேரும், ஹரியாவாவில் 522 பேரும் சாலை பள்ளங்களுக்கு பலியாகியுள்ளனர். கடந்த 2016-ம் ஆண்டு பலியானவர்களை விட 2017-ம் ஆண்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்பதுதான் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும்.



    சாலைகளை செப்பனிடும் பணிகளுக்காக பலநூறு கோடி ரூபாய்களை அரசு ஒதுக்கிய பின்னரும் இந்த மரணங்கள் நிகழ்ந்துள்ளது வேதனை அளிக்கும் ஒன்றாக இருக்கிறது. 

    கடந்த ஆண்டில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பொதுமக்கள், வீரர்கள் என மொத்தம் 803 பேர் உயிரிழந்துள்ளனர். பயங்கரவாத தாக்குதல்களில் இறந்தவர்களை விட சாலை பள்ளத்தினால் பலியானவர்கள் 4 மடங்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதனால், பயங்கரவாத இயக்கங்களே நீங்கள் நன்றாக ஓய்வெடுங்கள். பொதுமக்களை கொல்ல அரசு சிறப்பு திட்டங்களை கொண்டுள்ளது என சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர். மேலும், சாலை பள்ளங்களில் சிக்கி பலியானவர்கள் அனைவரும் சாமானியர்களே, எந்த விஐபி வீட்டுக்கு செல்லும் சாலைகள் பள்ளம், மேடாக உள்ளது எனவும் பலர் குமுறிவருகின்றனர்.
    ×